உலகத்தில் உள்ள அஷ்டமா சித்திகள் என்பது எது ?
அணிமா : அணுவைப் போல் நுட்பமான மிக நுண்ணிய நிலைக்கு உடலை கொண்டு சென்று கண்களுக்கு புலப்படதிருத்தல்.
மகிமா : உடலை மலையை போல் பிரம்மாண்டமாகப் பெரிதாக்குதல்
இலகிமா : காற்றை போல் உடலை லேசாக்குதல், இந்த நிலையை எட்டிய பிறகு ஒரு யோகியால் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகின்றது.
கரிமா : எதனாலும் அசைக்க முடியாதபடி உடலை மிகவும் கனமாக்குதல்.
பிராப்தி : இயற்கை சக்திகளையும் மற்ற எல்லாப் பொருட்களையும் தன் வயப்படுத்துதல், தன் மனதினால் நினைத்த எதையும் மாற்றுதல் மற்றும் அடைதல்.
பிரகாமியம் : தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல் அதாவது கூடு விட்டு கூடு பாய்தல்.
வசித்துவம் : விலங்குகள் மனிதர்களுள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் வசியபடுத்தி அனைத்தையும் தன் வசப்படுத்துதல்.
,ஈசத்துவம் : ஆக்கல் காத்தல் அழித்தல் முதலானவற்றை செய்யும் இறை சக்த்தியையே பெற்று விடுதல்.
இவைகள் தான் அஷ்டமா சித்திகள் என்கின்ற சக்திகள். .
No comments:
Post a Comment