Monday 27 July 2015

என்ன பாவம் செய்தேன் இந்த பாவி நான் ? இறைவா !1


எந்த பாவமும் செய்யாமல் இருக்கும் போது ஏன் இந்த கஸ்டம் இறைவா
என்று நாம் மனதுக்குள் சொல்லும் போது இந்த பாடலை படித்து பாருங்கள் வள்ளலார் தான் இறைவனிடம் முன் மன்றாடிய பாடல் 
நீங்கள் என்ன பாபம் செய்தீர்கள் படியுங்கள்

மனுமுறை கண்ட வாசகம்:



நல்லோர் மனத்தை நடுஞ்ங்க செய்தேனோ  !

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ  !

வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ  !

வரவு போக்கு ஒழியவழி அடைத்தேனோ  !

தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ  !

தருமம் பாராது தண்டம் செய்தேனோ  !

கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ  !

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ  !


மனஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ  !

மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ  !

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ  !

குடிக்கின்ற நீருள்ளக் குளத்தைத் தூர்த்தேனோ  !

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ  !

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ  !

உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரஞ்செய்தேனோ  !

ஊன்சுவை உண்டு உடல் வளர்தேனோ  !

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ  !

ஆசை காட்டி போசஞ் செய்தேனோ  !

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ  !

வெய்யிலுக் கொதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ  !

பசித்தோர் முகத்தை பாரா திருந்தேனோ  !

பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ  !

கோள் சொல்லிக் குடும்பம் கலைத்தேனோ  !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ  !

கற்பழித்தவளைக் கலந் திருந்தேனோ  !

கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ  !

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ  !

கருப்பம் அழித்துக் களித்திருந்தேனோ  !

கற்றவர் தம்மைக் கடு கடுத்தேனோ  !

கண்றுக்கு பாலுட்டாது கட்டி வைத்தேனோ  !

குருவை வணங்கக் கூசி நின்றேனோ  !

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ  !

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ  !

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ  !

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ  !

தவஞ் செய்வோரை தாழ்வு சொன்னேனோ  !

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ  !

சிவனடியாரைச் சீறி வைதேனோ  !

சுத்த ஞானிகளைத் தூஷனம் செய்தேனோ  !

தந்தைதாய் மொழியை தள்ளி நடந்தேனோ  !

தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ  !

என்ன பாவம் செய்தேனோ  இனதென்று அறியேன்.



திருச்சிற்றம்பலம்.     

No comments:

Post a Comment