Wednesday 29 March 2017

நான் ;எழுதிய மனம்மயக்கும் கலை புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு பகுதி

நம்பிக்கை என்பது 
::
நம்பிக்கை  மீது நம்பிக்கை வேண்டும் என்கின்றார்கள் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்எந்த ஒரு செயலுக்கும் நம்பிக்கை வேண்டும் என்பார்கள்எல்லோரும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள் ஆனால் எல்லோரும் வெற்றிபெற முடியவில்லை. ஏன்நம்பிக்கை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா சிலர் எதிலுமே நம்பிக்கை கொள்வது இல்லை அவர்களும் வாழ்க்கையில் பல வெற்றிகளை  பெறுகின்றார்கள் எப்படி?
கடலின் ஆழத்தைகூட அறியலாம் ஆனால் மனிதனின் மனதின் ஆழத்தை அறியமுடியாது ஆனால் ஹிப்னாடிசம் மூலம் இப்போது மனதையும் அறியமுடியும்,  ஆழத்தையும் அறியமுடியும்.

காற்றடித்து ஓயலாம், மழை பெய்தும் ஓயலாம் புயல் அடித்தும் ஓயலாம் ஏன் கடல் அலை கூட  அடித்தும்  ஓய்ந்துவிடலாம், ஆனால் மனதில் கவலை மட்டும் வந்து விட்டால் மனம் ஓய்வது இல்லை அந்த மனதையும் ஓய்ந்து அமைதி படுத்துவது ஹிப்னாடிசம்.

கைவிரல்களை எல்லோரும் ஒவ்வொருவருடைய குணத்துக்கு உதாரணமாக சொல்லுவார்கள். அதாவது எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றதா அது போல் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி என்பார்கள். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியான குணத்தில் இருப்பது. ஒருவர் மனத்தை போல் அடுத்தவர் மனது   இருப்பதுஇல்லை. மனது வேறு வேறு மாதிரி.. இரண்டு பேர் மனமும் ஒன்று போல் இருப்பது மிகவும்கஸ்டம் .கணவன்மனைவி இரண்டு.பேர்களின் மனதும் ஒன்று போல் இருந்து விட்டால் அவர்கள் வாழ்க்கை சொர்க்கம் தான்.  அதாவது    நமது மனதை அடக்குவது போல் கை விரல்களை சரியாக மடக்கி பாருங்கள். எல்லா விரல்களும் ஒரேஅளவு ஆகிவிடும். அது தான் மனதை அடக்கினால்  எல்லோரையும் ஆழ்மன தூக்கநிலைக்கு கொண்டு சென்றால் எல்லார் மனதும் ஒரேமாதிரி ஆகிவிடும். வேற்றுமை இருக்காது. எல்லோருடைய குணமும் ஒரேமாதிரி ஆகிவிடும். அது தான் நம்பிக்கை மனதின் மீது உள்ள நம்பிக்கை.
நம்பிக்கை நார் மட்டும் கையில் இருந்து விட்டால் உதிர்ந்த பூக்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிகொள்ளும்அப்படியானால் நம்பாதவர்களுக்கு இந்த அதிசயம் நிகழாதா ?..?
ஒரு பெண் ஒருவனை அதாவது கணவனை நம்பி தன்னை வாழ்க்கை முழுவது காப்பாற்றுவான் என்று நம்பி தான் அவளை முழுமையாக அவனுடன் ஒப்படைக்கின்றாள், என்ன நடக்கின்றது அவள் நம்பிக்கை முழுவதும் நிறைவேறியதா ? கணவனிடம் இருந்து அன்பு பாசம்  கிடைத்ததா இல்லையே ஏன் ?.
ஒருவரை வாழ்க்கையில் நம்பி நம்பி நாசம் போனேன்அது நம்பிக்கை துரோகம், ஏன், ? துரோகம் சரி அது என்ன நம்பிக்கை துரோகம்ஒருவர் மீது உள்ள  நம்பிக்கை கெட்டு போனதால் அது துரோகமாகின்றதுஅது அடுத்தவர்க்கு செய்த துரோகம் அன்றி அது நம்பிக்கைக்கு செய்த துரோகம் என்று எப்படி சொல்வது.
நம்பிக்கை தான் வாழ்க்கை என்கின்றார்கள் அப்படியானால் நம்பாதவர்களுக்கு வாழ்க்கை இல்லையா?
நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் நட்சத்திரத்தை கூட இடம் மாற்றி வைக்கமுடியும்.
நம்பிக்கையை விட ஆழ்மனபதிவே சிறந்தது. வழுக்கை தலையில் முடி வளரும் என்று நம்பிக்கை, நம்பிக்கை வைத்தால் முடி வளருமா ஆழ்மனதில் வைத்து பாருங்கள் முடி வளரும்.
இரவு படுக்கைக்கு போவது காலையில் உயிரோடு  கண் விழிப்போம் என்று நம்பிதானேதூங்குகின்றோம்,. ஆனால் சிலர் இயற்கையை மீறி தூக்கத்திலே இறந்து போவது ஏன் சுனாமி, நெருப்பு, பூகம்பம் வெள்ளம், சில மணித்துளிகளில் கண்மூடி திறக்கும் நேரத்தில்  ஆயிரக்கணக்கானவர்கள் ஏன் இறந்து போகின்றார்கள் ? அவர்கள்  இரவுதூங்க செல்லும் போது நம்பிக்கை இல்லாதவர்களாக தூங்கினார்களா. யோசித்து பாருங்கள்
வாழ்வின் நம்பிக்கை என்ன ஆனது.
எதை நம்பி ஒரு விதை முளைத்து பூமியில் இருந்து வெளியே வளர்ந்து வருகின்றது. தன்னை விதைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையாளா,  எப்படி வந்தது அந்த நம்பிக்கை. அந்த மனிதனுக்கே வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லை பிறகு அந்த செடிக்கு எப்படி வந்தது. ?
உண்மையில் நாம் சாதிக்காததை, சாதிக்க முடியாதை, சாதிக்க நினைக்கின்றோம் அதை சாதிப்போம் என்கிற நம்பிக்கையில் வாழ்கின்றோம். நாம் சாதித்தவுடன் நாம் நம்பிக்கை உடைந்து போகின்றது அது எனது திறமையால் வந்தது. என்பார்கள்
அன்று நினைத்தேன் நடந்தது, நேற்று நினைத்தேன் நடந்தது, இன்றும் நினைப்பேன் நடக்கும் நாளையும் நினைப்பது நடக்கும்  உங்கள் எண்ணங்களை ஆழ்மனதில் பதிவுசெய்தால் 
எல்லோரும் நம்பி தான் படிக்கிறார்கள் அவர்கள் படித்த தகுதிக்கு தகுந்தமாதிரி வேலைகிடைக்கின்றதா ? இல்லையே சிலர் பொறியியல்பட்டம்பெற்று ஒருசிறு கம்பெனியில் சாதாரணமான கிளார்க்வேலை செய்வது ஏன். ? சாதாரணமான படித்து வெற்றி பெற்றவன் பெரியவேலையில் சேர்ந்து வெற்றி பெறுவது ஏன்? படிப்பில் தங்கபதக்கம் பெற்றவன் வேலை கிடைக்காமல் அலைவது ஏன்?  அவர்கள் நம்பிக்கை என்ன ஆனது.
ஒருவன் வானவில்லில் கூட அம்பு விடலாம் என்று கவிதை எழுதுவது கூட ஒரு நம்பிக்கையில் தானே
இருட்டு அறையில் வெளிச்சத்தை உருவாக்க முடியும். ஆனால் வெளிச்சம் உள்ள அறையில்  இருட்டை உருவாக்க முடியுமா  ?.
செத்து போனவன் சுடுகாடுவரை சென்று மீண்டும் உயிருடன் திரும்பிய கதைகளும் நிறைய உண்டு, பிணவரையில் சென்று திரும்பிய மனிதர்களும் உண்டு இவர்கள் எதன் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
பட்டினத்தார் அவர்கள் தான் சாமியாராக செல்லும் போது அவரின் தாய் மிகவும் அழுது புலம்பி எனக்கு இருக்கும் ஒரே மகன் நீ ஒருவன் தான் எனக்கு நான் இறந்த பிறகு நீ தான் ஈமசடங்கு செய்ய வேண்டும்  அதை விட்டு என்னை பிரிந்து செல்கின்றாய் என்று கேட்க அதற்கு பட்டிணத்தடிகள் நான் எங்கு சென்றாலும், இருந்தாலும் நீங்கள் இறந்து உங்களுக்கு ஈமசடங்கு செய்ய நான் வந்து விடுவேன் என்று உறுதி கூறி தன் பக்தி வழியில் சென்றார். பல கோயில்களுக்கு பயணம் சென்றார்காலம் கடந்தது அவரின் தாயார் கடைசி கட்டநிலையில் இறக்கும் தருவாயில் அருகில் உள்ளவர்கள் இனி உன் மகன் வரமாட்டான் உனக்கு ஈமச்சடங்கு செய்யயாரும் இல்லை என்று வருத்தபட்டார்கள். தாய் இறந்ததுவிட அந்த செய்தியை எப்படியோ பட்டினத்தார் தன் ஆழ்மனதின் சக்தியால் தெரிந்து கொண்டு உடனே ஒரு அற்புதமான பாடலைஈரஜந்து திங்களாய் இடைநோக எனை ஈன்ற அம்மாஎன்ற அற்புதமான பாடலை பாடிக்கொண்டு தன் பிறந்த ஊரை நோக்கிநடக்கத் தொடங்கினார். என்ன அற்புதம் அவர் தாயின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்று சுடுகாட்டைஅடையும் போது அவரும் சுடுகாட்டை அடைந்து தன் தாயின் முகத்தை பார்த்து அழுது அவரின் ஈமச்சடங்கை செய்து தன்கடமையை செய்துமுடித்தார்.   பட்டினத்தாருக்கு தன் தாயின் ஈமச்சடங்கு செய்வேன் என்று நம்பிக்கை எப்படி வந்தது அவர் தன் ஆழ்மனதின் மீது நம்பிக்கை வைத்ததால்
நம்பிக்கை என்றால் என்ன ? அது எங்கு வைப்பது  எப்படி வைப்பது எப்படி வெற்றி பெறுவது சும்மா பொதுவாக நான் மிகுந்த நம்பிக்கை வைத்தேன் ஆனால் என் நம்பிக்கை தோற்றுபோய்விட்டது  ஏன்? அந்த நம்பிக்கை எல்லாம் வெளிமனதில் மட்டுமே பதிவானது நீங்கள் உங்கள் ஆழ்மனதை உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வாருங்கள் அந்த ஆழ்மனதின் மீது நம்பிக்கை வையுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் வெற்றிமட்டுமே பெறுவீர்கள். ஆழ்மனதை எப்படி கட்டுபடுத்துவது உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது அது தான்      ஹிப்னாடிசம்   ஹிப்னாடிசம்     ஹிப்னாடிசம்.



Tuesday 28 March 2017

மனம் மயக்கும் கலை புத்தகத்தில் இருந்து  சிகிச்சை அனுபவங்கள்          


செக்ஸ் என்றால் என்ன?
ஓசூர் நகரத்தில் இருந்து 27 வயது வாலிபர் செந்தில் சிகிச்சைக்காக அழைத்துவந்தனர். அவரிடம் தனியாக பேசிய போது தன்னுடன் காதில் யாரோ பேசிகொண்டு இருக்கின்றார்கள்  அவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றார்கள் என்பது போல் சொன்னார். தனக்கு செக்ஸ் மீது ஆர்வம் அதிகமாக இருக்கின்றது  அதனால்  இண்டர்நெட்டில் சென்று ஆபாசமான படங்கள் பார்ப்பது மட்டும் எனக்கு பிடிக்கும். என்றார். தனக்கு திருமணம் ஆகி 7 மாதம் ஆகின்றது ஆனால் தற்போது மனைவி பிரிந்து இருப்பதாகவும் சொன்னார். காரணம் கேட்டபோது தனக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லை என்றும் தன்னை அவர் அடிமைபடுத்துகின்றார் என்றார்
திருமண வாழ்க்கை பற்றி கேட்ட போது தனக்கு செக்ஸ் பிடிக்கவில்லை என்றார். அதாவது செக்ஸ் பார்க்க பிடிக்கின்றது  ஆனால் செக்ஸ்ல் ஈடுபடுவது பிடிக்கவில்லை என்றார். பிறகு என்ன நடந்தது என்று விளக்கமாக கேட்டபோது மனைவியுடன் ஒருமுறை மட்டுமே உறவு வைத்ததாகவும் அப்போது அதுவும் மனைவி  கட்டாயபடுத்தி உறவு செய்ய சொன்னதாகவும் அதனால் முதல் முறையாக உறவு வைத்த போது எனது ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் வந்து பயம் ஏற்பட்டுவிட்டது என்றார்.
(குறிப்பு ; ஒரு சிலருக்கு முதன் முதன் முறையாக உறவு வைக்கும் போது ஆண்உறுப்பில் கீழ்பகுதியில் லேசாக காயம் ஏற்பட்டு ரத்தம் வருவது சாதாரணமான நிலையாகும். அது போல் தான் அந்த நபருக்கும் தோல் பகுதி கிழிந்து ரத்தம் வந்து உள்ளது)
அதனால் எனக்கு பயமாக இருக்கின்றது என்றார். மீண்டும் என்னிடம்  அவர் செக்ஸ் வைத்தால் உறவு செய்தால் என்ன வரும் அதனால் என்ன பயன் என்று என்னிடம் கேட்டார். மேலும் சிலமுறை நான் சுயஇன்பம் செய்த போது ஆணுறுப்பில் இருந்து பால் போல தண்ணீர் மாதிரி வந்தது அது என்ன என்றும் கேட்டார். அப்போது நான் இதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அதாவது 27 வயது நல்ல கட்டுடல் கொண்ட  வாலிபன் ஒருவன் கேட்கும் கேள்வி எப்படி உள்ளது என்று யோசனை செய்துபார்த்தேன்தான்  டிப்ளாமா படித்து ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் ஆனால் தன்னால் நன்றாக வேலை செய்ய முடியவில்லை அதனால் வேலைவிட்டு நின்றுவிட்டதாகவும் சொன்னார்தன்னால் எதையும் ஞாபகம் வைத்துகொள்ள முடியவில்லை எல்லாம் மறந்துவிடுகின்றது  சில நேரத்தில் ஒரு இடத்திற்கு சென்றால் தான் எதற்காக அந்த இடத்துக்கு சென்றோம் என்று  மறந்துவிடுகின்றது.  அதனால் அந்த இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து யோசனை செய்வதாக சொன்னார்  நீண்ட நேரத்துக்கு பிறகு வீட்டுக்கு செல்வதாகவும் சொன்னார். . தற்போது கடந்த நான்கு மாதங்களாக  மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும் தனக்கு எதிராக சதி செய்து கொண்டு இருப்பதாகவும் சொன்னார். தன்னால் தூங்க முடியவில்லை என்றும் பரிதாபமாக சொன்னார்.
அந்த நபரை ஆழ்ந்த தூக்கத்தில் கொண்டு சென்று அவருக்கு தேவையான நல்லபரிந்துரைகள் கொடுத்து இனி நீ தைரியமானவன் உனக்கு நல்ல ஞாபகசக்தி நன்றாக உள்ளது இனி நன்றாக தூங்குவாய் என்றும் பரிந்துரைகள் சொல்லபட்டது. அவர் ஆழ்மனதில் உள்ள பதிவுகள் என்ன என்று கேட்ட
               


போது தன் குடும்பத்தார் குறிப்பாக தனது தந்தை சிறுவயதில் தன்னை கடுமையானமுறையில் நடந்துகொண்டதும் அதனால் எனக்கு இப்படி ஏற்பட்டுள்ளது என்று சொன்னபோது  அவர் தந்தை அது சரி என்று ஒத்து கொண்டார். பிறகு அவர் ஆழ்மனதில் உள்ள தேவையற்ற பதிவுகளை அழித்து விட்டு நல்ல பதிவுகளை பதிவு செய்து அனுப்பிவைத்தோம்அந்த நபரின் இது போன்ற மன பாதிப்புகளுக்கு அவர் தந்தை தான் காரணம். அவரின் சிறுவயதில்  ஏற்படுத்திய அளவுக்கு மீறிய கட்டுபாடு என்ற வகையில் அடக்கி அதிகமாக மிரட்டி  வளர்த்தது தான் காரணம்  ஆகும் 

இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக கட்டுபடுத்தி ,மிரட்டி அடக்கி வைக்கும் போது எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்பட்ட பிறகு அந்த நிலையை சரி செய்வது மிகவும் கஸ்டமாகி வாழ்க்கையே புரட்டி போட்டுவிடும் மேலும் இது போன்ற மனநிலை பாதித்த ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று தவறாக கருதி பெண் வீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்து வைக்கும் போது அந்த அப்பாவி பெண்ணுடைய வாழ்க்கையையும் நாசமாகி போய் அந்த பாபத்துக்கும் சேர்ந்து ஆளாகவேண்டி இருக்கின்றது.. அதனால் அந்த தந்தை தன் மகனின் வாழ்க்கை மட்டுமல்லாது ஒரு பெண்ணின் வாழ்கையும் சேர்த்துபாழாக்கிவிட்டார்பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.    . 
மனம்மயக்கும் கலை புத்தகத்தில் இருந்து  ஹிப்னோ ஆழ்மன     சிகிச்சை   அனுபவங்கள் 
          
கோபம் அமைதியாக மாறியது:
திருப்பூரில் இருந்து  ராதா (30)  (பெயர் மாற்றபட்டுள்ளது)  என்ற பெண்ணை அழைத்து கொண்டு, அவர் கணவர் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார் .அவர் மனைவிக்கு கடந்த நான்கு மாதங்களாக கடுமையான கோபம் வருகின்றது. கோபம் என்றால் சாதரணமான கோபம் அல்ல   குழந்தைகளை தேவையில்லாமல் அடிக்கின்றார்கணவனையும்  மோசமாக பேசுதல் மற்றும் அடிக்கவும் செய்கின்றார்.   குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வருவதற்கு பயமாக உள்ளது என்று அழுகின்றார்கள். தாயின் அருகில் செல்லவே பயப்படுகின்றார்கள் வீட்டில் சமைப்பது இல்லை வேறு எந்த வேலையும் செய்வதும்இல்லை  எப்போதும் ஒரு வகையான மனரீதியான பாதிப்பில் முகத்தை உம் என்று கடுகடுப்பாக   வைத்துகொண்டு இருப்பார்.  
பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் அடுத்த வீட்டில் குடியிருப்பவர்களிடம் கண்டபடி தேவையின்றி சத்தம் போட்டு பேசி சண்டை போடுதல்,  குளிக்காமல் தலை விரித்தபடி வெறித்தபடி பார்த்து கொண்டு இருப்பது போன்று இருப்பார் .அந்த பெண் ஒரு முறை தன் கணவன் கையை கடித்து ரத்தம் வருமாறு செய்துவிட்டார். அதனால் கணவனுக்கும் பயம் பிடித்துவிட்டது மேலும் தன்னுடைய மாற்று திரனாளியான தந்தையை வைத்து கொண்டு  மிகுந்த கஸ்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எல்லாம் அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது  என்றும்,  அதற்கு கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று சாட்டை அடித்து பூஜை செய்து மந்திரித்து வரவேண்டும், என்றும் சொல்ல, அந்த பெண்ணும் தனக்கு பேய் பிடித்துவிட்டது உண்மை தான், அதற்கு எங்கு கூப்பிட்டாலும் தான் வரதயார் என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் கோயிலுக்கு சென்று மந்திரித்து சாமி கும்பிட்டு சாட்டையில் அடித்து பேய் ஓட்டுவதற்கு கோயிலுக்கு போவதற்கு முன்பாக என்னை பற்றி கேள்விபட்டு,
என்னிடம் ஹிப்னோதெரபி சிகிச்சைக்காக அழைத்துவந்தார் அவரின் கணவன்.   நான் அந்த பெண்ணிடம் 10 நிமிடம் பேசிய பிறகு, 15 நிமிடம் நான் சொல்வதை கேட்டால்  போதும், உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூற,  அந்த பெண்ணும் ஒத்துகொண்டு எனது ஹிப்னாடிச சிகிச்சை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்திய, பின் அவரை ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு சென்று அவரோடு ஆழ்மனதில்நான் பேசிய போது அந்த பெண்ணின் பிரச்சனைக்கான உண்மை காரணம் கண்டுபிடிக்கபட்டது. அதாவது அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மூவரும் சேர்ந்து அவரைபற்றி தவறாக உறவினர், மற்றும் நண்பர்களிடம்  கூறவிட்டார்கள். அது பற்றி அவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு கேட்கும் போது அது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதியதால், தான் அந்த பெண்ணின் மனதை பாதித்து விட்டது.. இதனால் அந்த பெண் தான் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் அந்த ஆழ்மனபாதிப்பு கோபமாக அதை வெளிபடுத்தி காட்டுகின்றார்...

ஒருவருடைய ஆழ்மனம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபடும் போது அந்த பாதிப்பு எதாவது ஒரு வகையில் வெளிப்படுகின்றது. அதாவது , பயம், மறதி கோபம், கனவு ,படபடப்பு, சோர்வு தூக்கமின்மை, திக்குவாய் போன்ற எதாவது ஒன்று ஆழ்மனபாதிப்பாக வெளிப்படுகின்றது. இந்த பெண்ணுக்கு கோபமாக வெளிபட்டது.  அந்த கோபம் அவர்  குழந்தைகள் மற்றும் கணவன் மீது வெளிப்பட்டது.. ஹிப்னாடிசம் சிகிச்சையின் போது அந்த பெண் தனக்கு தன் கணவனுடைய அன்பு குறைவாக கிடைப்பதாகவும்,  மனம்வருந்தி சொன்னார்.    அந்த பெண்ணுக்கு ஆழ்மனதில் அவருக்கு ஆறுதல் கூறி,   கெட்ட பதிவுகளை நீக்கிவிட்டு, பெரியவர்கள் தவறு செய்துவிட்டார்கள்அவர்களை நீங்கள் மன்னித்துவிடுங்கள்இனிமேல் இது போல் தவறு செய்யமாட்டார்கள் என்றும் இனி கணவன் உங்களிடம் மிகவும் பாசமாக இருப்பார் என்றும், மேலும் சிலநல்லபதிவுகளை ஆழ்மனதில் பதிவு செய்தேன்.   ,ஒரு  வாரம் கழித்து கணவன் மனைவி இருவரும் வந்து, கை கூப்பி வணங்கி  சார்,  எனக்கு இந்த ஒரு வாரமாக கோபமே வரவில்லை,   நான் நன்றாகா ஆகிவிட்டேன் என்று மனதார நன்றி கூறி சென்றார்கள்..