Monday 20 July 2015

தவிர்க்கபடவேண்டிய உணவுகள் (அத்தணையும் வெண்மை)

தவிர்க்கபடவேண்டிய 5 வகை உணவு பொருட்கள்

1    மாத்திரை  2 .சர்க்கரை, 3 உப்பு,  4 பால்   5  அரிசி


மாத்திரை

பொதுவாக எந்த வகையான மாத்திரைகளும் உடல் நோய்களை போக்குகிறதோ இல்லையே பக்க விளைவுகள் ஏற்படுத்தும். அதாவது வயிறு சிறிநீரகம் உடல் வீக்கம் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அதிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள மருந்துகள் முடிந்த மட்டும் 90% மேல் தவிர்க்கவேண்டும். பொதுவாக எல்லா மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும் மாத்திரைகள் விஷம் போன்றது. ஒரு மாத்திரையை மென்று தின்னமுடியாது..

சர்க்கரை:

சர்க்கரை என்பது வெள்ளை விஷம் என்ரு அழைக்கபடுகிறது(     )  முடிந்த அளவு சர்க்கரை பயன் படுத்துவதை நிறுத்திக்கொண்டு மாற்று வழியை கடை பிடிக்கபடவேண்டும். அதே போல் இனிப்புகளில் திரவ நிலையில் உள்ள இனிப்பு அதாவது குளோப்ஜாமுன், ஜிலெபி, போன்ற உணவுகள் தவிர்க்க வேண்டும். அந்த மாதிரி இனிப்புகள் சாப்பிடும் போது நமது உடல் விரைவில் வெப்பம் அதிகமாகிறது. அதனால் உடல் விரைவில் கெட்டு போகிறது, நாக்கு செத்து அதன் தன்மையில் இருந்து உணர்வு இல்லாமல் போகிறது. முடிந்த வரை 70%  முதல்  80% வரை தவிர்ப்பது நல்லது. சர்க்கரையும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

உப்பு:

உப்பு என்பது நமது உடலில் சிறிநீரகம் சம்பந்தனானது. அதனால் அதை அதிகமாக சேர்க்கும் போது சிறிநீரகம் தன் பணியை கடுமையாக அதிகரிக்கவேண்டி இருக்கிறது.. அத்துடன் அங்கிருந்து செல்லும் ரத்தம் இதயத்தில் வேகமாக பம்ப் செய்ய வேண்டி இருப்பதால் இதயம் கடுமையாக வேலை செய்யும் போது ரத்த அழுத்தம் (  ) ஏற்படுகிறது. முடிந்த வரை 50% வரை உப்பு குறைத்து கொள்வது நல்லது. உப்பு ரொம்ப தப்பு. உப்புவும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.


பால்:

பால் என்பது மனித உணவே அல்ல. அதை மாட்டிலிருந்து நாம் தெரியாமல் திருடிவிட்டோம். பசு கன்று இரண்டு வருடம் நன்கு தாய்ப்பால் குடித்தால் அது  இரண்டு வருடத்தில் சுமார் 25 கி.கி வரை எடை அதிகமாகும். ஆனால் மனித குழந்தை பால் குடித்தால் சுமார் 7.5 கிகி வரை அதிகமாகும். பசுவுக்கு அது தாய்ப்பால் ஆனால் மனிதனுக்கு அது திருட்டுபால்..  பால் உணவு வயிற்றுக்குள் செல்லும் வரை நன்றாக இருந்து வயிற்றில் அமிலத்தில் கலக்கும் போது கெட்டு (பிருத்து போய்போய் கட்டிகட்டியாக குழந்தைகள் வாந்தி எடுப்பதை பார்க்கிறோம். பெரியவர்களுக்கு அந்த கெட்டு போன உணவை ஜீரணிக்கும் சக்தி இருப்பதால் அது வாந்தியாக வருவது இல்லை. ஆனால் அடுத்த நாள் காலையில் வயிற்று போக்காக ஏற்படும். நேற்று எதுவுமே சாப்பிடவில்லை ஆனாலும் வயிற்று போக்கு ஏற்படுகிறது. என்று யோசிக்கவைக்கிறது. ஆகவே முடிந்த வரை பால் பொருட்களை நேரிடயாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது. வேறு சாம்பார், ரசம் போன்றவைகளாக, காபி,, டீ போன்றவையாக சாப்பிடலாம். பால் வெண்மையான நிறத்தில் இருக்கும்.

அரிசி:

அரிசி உணவை முடிந்த வரை உணவில் குறைத்து அத்துடன் காய்கறிகள் சேர்த்து கொள்ள வேண்டும். அதாவது அரிசி பொதுவாக நல்ல உணவு அல்ல. அதாவது சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை அதிகபட்சம் குறைக்க வேண்டும் ஆனல் அரிசியில் இருந்து தயாரிக்கபட்ட இட்லி போன்ற உணவு எல்லா நோயாளிகளுக்கும் பொது வான உணவாக பயன் படுத்த்படுகிறது. அரிசியை நேரிடையாக பயன்படுத்துவதைவிட அதில் சில மாற்றம் செய்து உணவாக படன்படுத்தலாம். உடலுக்கு நல்லது.   .

  

No comments:

Post a Comment