Monday 3 August 2015

சும்மா கொஞ்சம் சிரிங்க ஆமாங்க



இருவர்

உங்கபையன் என்ன பண்ணிட்டு இருக்கான் படிச்சு முடிச்சிட்டானா

இல்லை மேஷம் நிஷபம் பார்த்திட்டுஇருக்கான்

என்ன ஜோதிடம் பார்க்கின்றானா

இல்லைங்க ஆடு மாடு மேய்க்கிறான்.




அழுகின்ற குழந்தை  ஒருவர்.

அதோ பூச்சாண்டி உன்னை அவன்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்

குழந்தை அதோ பாரு போலீஸ் அவன்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்.



போலீஸ் திருடன்

ஏட்டய்yயா பக்கத்து ஊருக்கு திருட  தொழில் பண்ண போறேன் ஒரு 

சிபாரிசு கடிதம் கொடுங்க

எதற்கு    மாமூல் சரியா கொடுப்பான்னுதான்.



இருவர்

நாய் கடிச்சா என்ன பண்ணனும்

சமாதனமாக போய்விடனும் திரும்ப கடிக்கிறது தப்பு
இருவர்


என் பொண்ணுக்கு கல்யாணம்


அப்படியா மாப்பிள்ளை பையன் என்னவா இருக்கான்

தற்போது பிரம்மசாரியாதான் இருக்கான்.


இருவர் பேச்சு


உங்களை பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு
ரொம்ப சந்தோஷம்

இனிமே கை மாத்து கடன் உங்க்கிட்ட தான் வாங்கறதுன்னு முடிவு 
பண்ணிட்டேன்.


டாக்டர் நோயாளி

டாக்டர் கண்ணு ரொம்ம கூசுது

மாங்கா புளீயங்கா இதை எல்லாம் உத்து பாக்காதிங்க


டீக்கடையில்

நண்பா பப்ஸ்க்கு சில்லரை இல்லை அதனால்  நீ கொஞ்சம் கூட வரையா




கடன் வாங்க சில டிப்ஸ்

உங்க கிட்ட கடன் வாங்கினா ரொம்ப ராசி சார்.

உங்க்கிட்ட வந்தா கண்டிப்பா கடன் கிடைக்கும்  நீங்க ஒரு நம்பிக்கை நட்சத்திரம் சார்.

உங்க கை ராசியான கை கடன் வாங்கினா சீக்கிரம் திருப்பி கொடுத்திடலாம்

உங்க மாதிரி கடன் கொடுக்கின்றது நாட்டிலே மழை பெய்து.
வட்டி வாங்கியே மாளீகை கட்டர காலத்துல நீங்க பணம் கொடுக்க லேட் ஆனாலும் பெருந்தன்மையா விட்டு கொடுப்பிங்க


புருஷன் பொண்டாட்டி

49 ஜென்மம் எடுத்தாலும் நாம ஒன்ன இருக்கனும் கண்ணே
அது என்ன 49 ஜென்மம்

7  7 ஜென்மம் தான்



வரதட்சணை வாங்கிய கணவன்

ஏங்க அப்பா கொடுத்த டிவீயை ஹால்ல வைங்க


அண்ணன் கொடுத்த பீரோவுல அப்பா கொடுத்த நகையை வைங்க

மாமா கொடுத்த காரு நிழல்ல நிறுத்துங்க

சித்தப்பா தந்த பூட்டால வீட்டை பூட்டுங்க

வரதட்சனை பணத்தில் ரு 2000 எடுத்துக்குக்ங்க

ச்சீ இதுக்கு போய் அழாதிங்க எங்க அப்பா கொடுத்த டிரஸ்சோட அவர் 

கொடுத்த கர்ச்சீப்பால் கண்களை துடைத்துக்குங்க



அப்பா அம்மா

என்னங்க ஆபீஸ் போகலையா  இல்லை இன்று ஆபீஸ் லீவு

ஏனுங்க அடிக்கடி ஆபீஸ் லீவு போட்டு தூங்காம உடம்பை கெடுத்துகாதிங்க



பிச்சைகாரன் திருடன்


அய்யா திருட்டிதான் போறீங்க 100 ருபா தர்மம் செய்திட்டு போங்க 

உங்களை போலீஸ்பிடிக்காது.

No comments:

Post a Comment