மனம் மயக்கும் கலை புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்
தூக்கம் என்றால் என்ன?.
தூக்கம்
என்றால் என்ன ? சாதாரணமாக நாம் இரவில் தூங்கி காலையில் எழுவது தூக்கம் ஆகும். அந்த தூக்கம் நன்றாக தூங்கிஎழும் போது புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக எழவேண்டும்.
அந்த தூக்கம் தான் நோயை குணமாக்குகின்றது.
அதனால் தான் மருத்துவமனைகளில்
நோயாளிகள் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது.. தூக்கம்
களைப்பை போக்குகின்றது,, வேலை செய்து கடுமையாக களைப்பாக இருக்கும்
போது நன்றாக தூங்கிஎழுந்தால் உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கமுடிகின்றது.... தூக்கத்தில் தான் உடல்வளர்ச்சி பெறுகின்றது..
அதாவது குழந்தைகள் நன்குதூங்கும் போது குழந்தையின் உடல்வளர்ச்சி அடைகின்றது..
ஒருவன் நன்குதூங்கும் போது சமாதி நிலைக்கு செல்கின்றான்.. ஒருவர் தூக்கத்தின் போது இறந்தவர்களை போல் அசைவற்று இருக்கின்றார்கள்.
அதனால் தான் ஆழ்ந்ததூக்கத்தில் அற்புதங்கள் நிகழ்த்தமுடியும். அதுதான் யோகநித்திரை அதுதான் ஹிப்னாடிசம்..
தூக்கம்
என்பது கண்களின் இமைகள் முதலில் மூடுகின்றது..,
பிறகு கண்ணின் ஒளிமங்குகின்றது,,, அதனால் தான்
சில நேரத்தில் பாதி தூக்கத்தில் தூங்கிஎழும் போது கண்களால் சிலநேரத்தில் பார்க்கமுடியாமல்
கண்களை கசக்கி பிறகு பார்க்கின்றோம்... அடுத்து மூக்கு எந்த வித வாசனையை அறியும்தன்மையை, உணர்ச்சியைஇழக்கின்றது..
அடுத்து நாவின்ருசி அறியும்திறன்
குறைகின்றது., தொடர்ந்து செவியின் கேட்கும் திறன் குறையும்.
கடைசியாக ஸ்பரிச உணர்ச்சி, அதாவது தொடுதல் உணர்ச்சிகுறையும்..
தூங்கும்போது தொட்டல்தெரிவது இல்லை. இது தான் தூக்கம்
ஆகும்.
.இறைவன் கொடுக்கும் தூக்கம் இயற்கையானது. மனிதன் கொடுக்கும்
தூக்கம் தான் ஹிப்னாடிச தூக்கம் ஆகும்.
மனிதன் கொடுக்கின்ற தூக்கம் மகத்துவமானதூக்கம், அற்புதமானதூக்கம். .. இயற்கையாகதூங்கும் தூக்கத்திற்கும்
ஹிப்னாடிச தூக்கத்திற்கும் மிகபெரிய வித்தியாசம் உள்ளது. . சாதாரணதூக்கத்துக்கும் யோகநித்திரை
அல்லது அறிதுயில் தூக்கத்துக்கும் மிகபெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனால் கொடுக்கமுடியாத
ஒன்றை மனிதனால் மட்டுமே கொடுக்கமுடியும் போது அவன் சக்தி எந்த அளவு மிகபெரியது
என்று தெரியவரும்.
தூக்கம்
இல்லை என்றால்:
. .
மனதில்வலி
இருந்தால் , உடம்பில்வலி இருந்தால் வயிற்றில்பசி
இருந்தால் நிம்மதியாக , தூங்கமாட்டார்கள்.
இல்லை அவர்களால் தூங்க முடியாது. தூக்கம் வராமல்
புரண்டுபுரண்டு படுத்துகொண்டு இருப்பார்கள். உடல்வலிக்கு மருந்து மாத்திரைகள்
சாப்பிட்டு வலிபோக்கி கொள்ளலாம்.. வயிற்றின்பசிக்கு உணவுஉண்டு
பசியைபோக்கி கொள்ளலாம்.. பிறகு தூக்கம் வரும்,. ஆனால் மனதில் உள்ள வலிக்கு மாத்திரைகள்,
மருந்துகள் கிடையாது.
மனதுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. மனது சரி இல்லை
என்றால் தூக்கம்வராது.. பைத்தியம்பிடித்தவர்கள் மனநலம் பாதிக்கபட்டவர்கள்தூங்கமாட்டார்கள்... மனது சரி இல்லாத போது தான் அவர்கள் பைத்தியமாக மாறுகின்றார்கள். அந்த மனநிலை பாதித்தவர்களை தூங்கவைத்தால், அவர்கள் பைத்தியம்தீர்ந்து நல்லவர்களாக மாறிவிடுவார்கள்.. அந்த மனதை சரி செய்வது தான் ஹிப்னாடிசம் சிகிச்சை முறையான ஹிப்னோ தெரபி சிகிச்சை யாகும்
No comments:
Post a Comment